tamilnadu

img

தமிழ்மொழி நாகரிகத்தின் மொழி தருமபுரி புத்தகத் திருவிழாவில் ஆர்.பாலகிருஷணன் பேச்சு

தருமபுரி, ஆக.1- தமிழ்மொழி நாகரிகத்தின் மொழியென  தருமபுரி புத்தகத் திருவிழாவில் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷணன் பேசினார்  தருமபுரி மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும்  புத்தக திருவிழாவில் அறிவுசார் கருத்தரங் கம் செந்தில் மெட்ரிக் பள்ளி நிர்வாக அதி காரி சக்திவேல் தலைமையில் நடைபெற் றது. முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பா ளர் ஓய்வு இரா.கண்ணன் வரவேற்றார். இதில், வரலாறு தவிர்க்க முடியாதது என்ற  தலைப்பில் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பால கிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், வரலாறு தவிர்க்க முடியாதது,  தப்பிக்க முடியாதது, வரலாற்றை  படிப்பது. பேசுவது மட்டு மல்ல, எதிர் காலத்தை வழி நடத்துவதற்கு உதவும். அதியமான் என்பவர் கடையேழு வள் ளல்களில் ஒருவர், தனக்கு கிடைத்த நெல் லிக் கனியை அவ்வைக்கு கொடுத்தவர் தகடூர் மன்னன் அதியமான். 2300 வருடத் திற்கு முன் பாண்டியமன்னன் ஆட்சி புரிந் தார். அப்போது படித்தவர்கள் கற்றோர் சொன்னபடி ஆட்சி நடத்தினார். இதுதான் தமிழ் மரபு, வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மிகப்பழமையான சுமேரியா, சிந்துசம வெளி நாகரீகத்தில் எழுத்து கீரல் மண்பாண்டத்தில் எழுதப்பட்டிருந்தது. மண் பாண்டத்தில் கீறல்கள் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக இருந்துள்ளன. மண்பாண்டத்தில் கீறல் எழுத்து உள்ளது. இதை ஏன் கீறல் என்கி றோம். இதை கீரியது யார். மண்பாண்டம் செய்யும் குயவர் எழுதி இருக்கிறார். அப் போதே கல்வி கற்றுள்ளனர். எழுதியுள்ள னர். அப்போது மண்பாண்டத்தில் எழுதி யது மரபாக இருந்தது. இப்போது சில்வர் பித்தளை பாத்திரத்திலும் எழுதும் மரபு உள்ளது. 2300 ஆண்டுகளுக்கு முன்பே 14 பெண் கவிஞர்கள் இருந்ததாக குறிப் பிட்டுள்ளனர். அப்போது எல்லா மட்டத் திலும் கல்வி கற்றிருக்கிறார்கள். தோற்றம் எவ்வளவு முக்கியமோ, அதன் தொடர்ச்சி யும் முக்கியம். தொடர்ச்சிதான் தமிழை காப்பாற்றியிருக்கிறது. 16,17,18 ஆம் நூற்றாண்டுகளில் இந் தியாவிலும் பர்மாவிலும் அச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவி லேயே முதன்முதலில் தரங்கப்பாடியில் தமிழில் அச்சடிக்கப்பட்டது. 1712 ஆம் ஆண்டில் திருக்குறள் முதலில் அச்சடிக்கப் பட்டது. இந்தியாவிலேயே அதிகமாக இருப்பது தமிழ் கல்வெட்டுகள். தமிழ்மொழி ஒரு மாவட்ட மொழி அல்ல, ஒருமாநில மொழி அல்ல,உலகமொழி,தமிழ் மொழி நாகரீகத்தின் மொழி இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாடல் நிறு வன துணை இயக்குனர் டி.சங்கர சரவணன், அதியமான் அரண்மனை நிறுவனர் கி. கோவேந்தன், அரசு கல்லூரி முதல்வர்கள்,  காரிமங்கலம் எஸ்.ஜெயசீலன், பென்னா கரம் கே.செல்வவிநாயகம், அரூர் செல்வ பாண்டியன், பாப்பிரெட்டிப்பட்டி, பி.கார்த்தி கேயன், பாலக்கோடு சி.தீர்த்தலிங்கம், குறிஞ்சி மெட்ரிக்பள்ளி நிர்வாகிகள் எல்.ராஜேந்திரன், கொ.ஆதிமூலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.