tamilnadu

மின் மோட்டாரை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை

 

தருமபுரி ஜன. 12- இண்டூர் அருகே, பழு தடைந்த மின்மோட்டாரை  சீரமைக்க வேண்டும் என  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம்,  நல்லம்பள்ளி ஒன்றியம் நாகர்கூடல் உள்ள கூலிக் கொட்டாய் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்ற னர். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, சிறு மின் விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் டேங்க், வறட்சி  காலங்களில் கிராம மக்க ளின் குடிநீர் தேவைக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இந்த குடிநீர் தொட்டியின் மின்மோட் டார் பழுதடைந்ததால், கடந்த 6 மாதமாக குடிநீர்  இன்றி மக்கள் சிர மப்பட்டு வருகின்றனர். எனவே, பழுதடைந்த மோட் டாரை பழுது நீக்கி பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி  வருகின்றனர்.

;