தருமபுரி, ஜூன் 24- பாலக்கோடு அரசு போக் குவரத்து பணிமனை முன்பு கழிநீர் கால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் எர்ரண அள்ளி ஊராட்சியில் அரசுப் போக்குவரத்து கழகப் பணி மனை உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல் லாததால் மழைக்காலங்களில் நெடுஞ் சாலையில் கழிவுநீர் கரைபுரண்டு ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நீரோடை கால்வாய் பகுதிகளை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வீடுகளில் புகும் நிலை உள்ளது.
இந்நிலையில், எர்ரணஅள்ளி ஊராட்சி மற்றும் பாலக்கோடு பேரூராட் சியில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவுநீர் போதிய கழிவுநீர் கால்வாய் இல்லாததால், நீர்வழிப்பாதைகள் ஆக்கி ரமிப்பில் உள்ளதாலும் சாலையில் கழிவு நீர் ஆறாய் ஓடுகிறது. இக்கழிவுநீர் அரசுப் பேருந்து பணிமனை முன்பு குட்டை போல் தேங்கி நிற்கும் நிலை நீடித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என வும், அப்பகுதியில் நீர்வழி ஓடை ஆக்கிர மிப்பை அகற்றவேண்டும் எனவும் அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.