tamilnadu

img

அனைத்து ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்குக - விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 18- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்டத்தின் சிறப்பு பேரவைக்கூட்டம் புதனன்று தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கே.எல்லப்பன் தலைமை யில் நடைபெற்ற இப்பேர வையில் மாநிலச்செய லாளர் ஜி.கணபதி, மாவட் டச் செயலாளர் எம்.முத்து, பொருளாளர் இ.கே.முருகன் ஆகியோர் உரையாற்றினர். இதைத்தாடர்ந்து சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக ரவி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரி யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை யில்லா நிவாரணமாக ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

;