தருமபுரி, ஜூன் 30- தருமபுரியில் உள்ள அன்னை மருத்துவமனை யில் 9 மாத கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்த தால் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி ஒன்றியம், சோகத்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஸ்ரீ்ரீதர் (40), இவரது மனைவி அபிராமி (28). இவர்களுக்குத் திரு மணமாகி 7 வருடங்கள் கடந்த நிலையில், அபிராமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் அன்னை என்ற தனியார் மருத்துவ மனையில் தொடர் பிரிசோதனைகள் செய்து வந்தார். இந்நிலையில், பிரசவத் திற்காக சனியன்று அன்னை மருத்துவ மனையிலிருந்து தருமபுரி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டடார். ஆனால் அங்கு அபிராமி உயிரிழந்தார் என அவரது உடல் மருத்துவ மனையின் பிரேதப் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனையில் திரண்ட அபிராமியின் உறவினர்கள் தருமபுரி-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, அபிராமியின் உறவி னர்கள் கூறுகையில், நீண்ட காலம் குழந்தை இல்லாமல், பின்னர் கர்ப்பம் தரித்த அபிராமி நல்ல முறையில் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற அடிப் படையில் தருமபுரி அன்னை மருத்துவ மனையில் உள்ள மருத்துவர் பிந்துவிடம் தொடர் மருத்துவப் பரிசோதனை பெற்று வந்தார். சனிக்கிழமையன்று மருத்துவ மனைக்கு வந்த அபிராமிக்கு நீர்சத்து குறை வாக இருப்பதாகக் கூறி குளுக்கோஸ் ஏற்றினர். அப்போது குளுக்கோஸ் பாட்டி லில் ஒரு ஊசி போடப்பட்டது. அதன் பின் அபிராமிக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களுக்குத் தெரியா மலேயே மருத்துவமனையின் ஆட்டோ வில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் தவறான சிகிச்சை அளித்த தால் தான் அபிராமி அவர்களது மருத்துவ மனையிலேயே இறந்துள்ளார். இறப்பை மறைப்பதற்காக மருத்துவமனை நிர்வா கம் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபிராமிக்குத் தவ றான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது சட்டரீதியான வழக்குப் பதிந்து நடவ டிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறினர். மறியல் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்ததின் அடிப்படையில் மறியலைக் கைவிட்டனர்.