tamilnadu

img

மனைபட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தருமபுரி, மார்ச் 9- நீண்ட ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருப்போ ருக்கு மனைபட்டா வழங்க வேண்டும் என பெரியூர் கிராம பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற் குட்பட்டது பெரியூர் கிராமம். இங்கு கடந்த 10, ஆண்டுகளுக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகட்டி குடியி ருந்து வருகின்றனர். மேலும், அரசுக்கு கட்டவேண் டிய வரி மற்றும் மின்இணைப்பு பெற்று அதற்கான கட்டணமும் செலுத்தி வருகின்றனர். சொந்தநிலம் இல்லாத இம்மக்கள் கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தற்போது  5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி  குடியிருந்து வருவோருக்கு தகுதியின் அடிப்படை யில் பட்டா வழங்கும் திட்டம் அரசு அறிவித்துள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் நீண்ட ஆண்டுகளாக குடியிருக்கும் எங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என மனுவில் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.