tamilnadu

ஜன.19-ல் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்

தருமபுரி, ஜன.9- தீவிர போலியோ சொட்டு மருந்து  முகாம் வருகின்ற ஜன.19ஆம் தேதியன்று  நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது.  இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட அள விலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட் டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் ஐந்து  வயதிற்குட்பட்ட 1 லட்சத்து 66 ஆயிரத்து 528 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அது போலவே  வரும் ஜன.19ஆம் தேதியன்று நடை பெறும் முகாமில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 869   குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20  முகாம்கள் என 984 முகாம்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை,  வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர்  சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார் வலர்கள் என சுமார் 4,083 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். இம்முகாம்கள் பெரு மளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், சந்தைகள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் நடைபெறுகின்றன. மேலும், சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந் தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந் தைகள் பயன்பெறும் வகையில் 18 நட மாடும் மருத்துவக்குழுகள் அமைக்கப் பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது மற்றும் பாதுகாப்பானது என  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரி வித்துள்ளார். 

;