தருமபுரி, செப்.19- மனைப்பட்டா, சாதி சான் றிதழ் வழங்கக்கோரி வியாழ னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தருமபுரி வட் டாட்சியரிடம் மனு அளிக்கப்பட் டது. இந்த மனுவில் கூறியிருப்ப தாவது, தருமபுரி நகராட்சிக்குட் பட்ட 32, 33ஆவது வார்டு அன்ன சாகரம், வேடியப்பன்திட்டு, ஏ.கொல்ல அள்ளிரோடு பகுதியில் ஏழ்மை நிலையில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். இவர்களில் பெரும் பாலனோர் விசைத்தறி பட்டறை மற்றும் தருமபுரி நகராட்சியில் முறைசாரா கூலி தொழிலாளர் களாகவும், பெண்கள் வீட்டு வேலை செய்தும் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இவர்கள் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டு களாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். மேலும் சொந்த வீடு இல்லாமல் வாடகைக்கு குடி யிருந்து வருகின்றனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இக்குடும் பங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். இதேபோல், தருமபுரி நக ராட்சிக்குட்பட்ட நாவிதர் காலனியில் உள்ளவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். 13 ஆவது வார்டு எம்ஜிஆர் நகரில் நூற்றுக்கும் மேற் பட்ட பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு எஸ்.சி சான்றிதழ் இல்லாததால் மேற் படிப்பு தொடர முடியாமலும், படிப்பை பாதியில் நிறுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் நலத்திட்டம், சலுகை களையும் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு விண்ணப் பித்தும் எஸ்.சி சான்றிதழ் வழங் கப்படவில்லை. எனவே பன்னி யாண்டி மக்களின் நலன் கருதி எஸ்.சி சான்றிதழ் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக் கப்பட்டிருந்தது. முன்னதாக, இந்த மனுவினை அளிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி, நகரச் செய லாளர் ஆர்.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஜெயா, நகரக் குழு உறுப்பினர்கள் வி.பி.சாமி நாதன், எம்.கார்த்திகேயன், எஸ். மணிகண்டன், பி.சங்கர், எம்.ரங்க நாயகி உள்ளிட்டோர் தலைமை யில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டு வந்திருந்தனர்.