நீட் தேர்வு: மாணவிகள் உயிரிழப்பிற்கு மத்திய அரசே பொறுப்பு
கே.சுப்பராயன் எம்.பி. பேட்டி
கோவை, ஜூன் 10- நீட் தேர்வு திணிப்பினால் தமிழகத்தில் மூன்று மா ணவிகள் பலியாகி உள்ளதற்கு மத்திய அரசே பொறுப் பேற்க வேண்டும் என சிபிஐ மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கோவை ஜீவா இல்லத்தில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில், இதுவரை நடந்த நீட் தேர்வுகளில் 20 ஆயிரம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரும், 60 ஆயிரம் பொதுப்பிரிவினரும், 7 லட்சம் முற்பட்ட வகுப்பினரும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதன்மூலம் வர்ணாசிரம நோக்கத்துடன்தான் நீட் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆகவே, இதற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மக்கள் பொதுப்பிரிவினருடன் ஒன்று பட்டு போராட வேண்டும். பாஜக, மான் அல்ல மாரீசன் என்பதை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள். 60 ஆண்டுகளாக கட்டிக்காத்த 245 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனி யாருக்கு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நாடு முழுவதும் பல லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கிய 6 லட்சம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை சிறு குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு எதிராக திட்டமிட்டு ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை மறைமுகமாக மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. மும்மொழி கொள்கை யால் தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறலாம் என்ற நிலை உருவாகக் கூடாது. இவ்வாறு அவர் கூறி னார்.
போக்குவரத்து விதி மீறல்
ஸ்மார்ட் கேமராக்கள் மூலம் ரூ.94 ஆயிரம் அபராதம்
கோவை, ஜூன் 10- போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்த கோவை - அவிநாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதில் இதுவரை 57 நபர்களிடம் இ-சலான் மூலம் 94 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறையினர் உயிர் அறக்கட் டளை உதவியுடன் புதிதாக கோவை - அவிநாசி சாலை யில் ஜே.எம். பேக்கரி சிக்னலில் இருந்து லட்சுமி மில் சிக்னல் வரை 5 ஸ்மார்ட் கேமராக்களை அமைத்துள்ளனர். இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணி யாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், விதிகளுக்கு அப்பாற்பட்டு இருசக்கர வாக னத்தில் அதிக நபர்களை ஏற்றிச் செல்லுதல், காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல் விதியை மீறி வாகனங்களை இயக்கிய 57 நபர்களிடமிருந்து 94 ஆயிரம் ரூபாய் வசூ லிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த ஐந்து மாதத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக போடப்பட்ட 1,93,728 வழக்கில் 3 கோடியே 50 லட்ச ரூபாய் வசூலிக்கபட்டுள்ளது. தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்ட 10 ஆயிரத்து 868 பேரு டைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யக்கோரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்ததில் 2,271 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சிக்னலை மதிக்காமல் வாகனம் இயக்கிய 8,460 பேரிடமிருந்து 6,77,900 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபோதையில் வாகனம் இயக்கியதாக 1,455 பேரிடமிருந்து 95 லட்சத்து 21,350 ரூபாயும், செல் போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்கியதாக 1260 பேரிடம் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 400 ரூபாய் வசூ லிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த ஐந்து மாதங்களில் விதி மீறி வாகனம் இயக்கியவர்களிடமிருந்து மூன்று கோடியே 50 லட்ச ரூபாயை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.