தருமபுரி, நவ. 3- மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல் படுத்தக்கோரி தருமபுரியில் அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு சங்கத்தின் மாவட்ட உதவித் தலை வர் கே.எம்.நஞ்சப்பன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலா ளர் பி.சுப்பிரமணியன், உதவி செயலாளர் கள் பி.சங்கு, பி.சந்திரசேகரன், பொருளா ளர் எஸ்.சுப்பிரமணியன், உதவித் தலை வர் பி.சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், தபால்காரர்களுக்கு 1996 ஜன வரி 1 ஆம் தேதி முதல் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அடிப்படையில் உயர் ஓய்வூதி யம் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். சிஜிஎச்எஸ் மருந்தகத்திலிருந்து மருந்துகளை பயனாளி களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்ட தனியார் மருத்துவமனைகளில் கட்ட ணம் இல்லாமல் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.