தருமபுரி, ஆக.12- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி முன் னாள் மாவட்டச் செயலா ளரும், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான தோழர் எம்.வெற்றிவேல் அவர்கள் (ஆக.12) திங்க ளன்று காலமானார். தருமபுரியைச் சேர்ந்த தோழர் எம்.வெற்றிவேல் 1981ஆம் ஆண்டு பட்டு வளர்ச்சித்துறையில் பணியில் சேர்ந்தார். அப்போது முதலே சங்கப் பணியிலும், சமூக பணியிலும் ஈடுபட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆரம்பிக் கப்பட்டபோது தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டார். தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக திகழ்ந்தார். நீண்ட காலம் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளராகவும், மாநிலச் செயற்குழு உறுப்பினராக நீண்டகாலம் பொறுப்பு வகித்தவர். தருமபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தை அமைத்த ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 1988, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை முன்னின்று நடத்தி சிறைக்கு சென்றார். பணி ஓய்வுக்கு பிறகு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக பணி யாற்றி வந்த தோழர் எம்.வெற்றிவேல் உடல்நிலை குறை வால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் (ஆக.12) திங்களன்று இறந்தார். ஆகஸ்ட் 13 தேதியன்று நண்பகல் 2 மணிய ளவில் நல்லடக்கம் தருமபுரியில் நடைபெறுகிறது. தோழர் எம்.வெற்றிவேல் இறப்புக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் தருமபுரி மாவட்ட மையம், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில மையம், தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.