தருமபுரி, நவ.2- தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவி லான தடகளப் போட்டிகளை சனியன்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி, தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது, கிராமப்புற ஏழை, எளிய பள்ளி மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்ற நோக் கத்தில் தமிழக அரசு சார்பில் கிராமப்புற விளையாட்டுத் திடல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் 43 வகையான தடகள விளையாட்டுகளுக்காக 256 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவினர்கள் என மொத்தம் 604 மாணவ, மாணவி யர் பங்கேற்று விளையாட உள்ளனர். இப்போட் டிகளில் முதல் 2 இடங்களை பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். இந்த வாய்ப்புகளை பள்ளி மாணவ, மாணவியர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்திக்கொள்ளுமாறு அவர் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் எ.கோவிந்தசாமி, அரூர் சட்ட மன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட வரு வாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், முதன்மை கல்வி அலுவலர் அ.முத்துக்கிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், ஜா.பியூலா ஜேன் சுசிலா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெ.முத்துகுமார், உடற்பயிற்சி ஆசிரியர் ரவி, வட்டாட்சியர் சுகுமார், தலைமையாசிரியர் சி. கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.