பென்னாகரம், அக்.15- பென்னாகரம், பிக்கிலி ஊராட் சிக்குட்பட்டு உள்ள ஆதிதிராவிடர் காலனி மற்றும் பெரியூர் இருளர் காலனியில் இடிந்து விழும் நிலை யில் உள்ள தொகுப்பு வீடுகளை புதுப்பித்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் ஒன்றியம் பிக்கிலி ஊராட்சிக் குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி மற் றும் பெரியூர் இருளர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், ஆதி திராவிடர் காலனி மக்களுக்கு 40 தொகுப்பு வீடுகளும், இருளர் மக்க ளுக்கு 30 தொகுப்பு வீடுகளும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டித் தரப்பட்டன. இந்நிலையில் அந்த தொகுப்பு வீடுகளின் கூரையின் மேல் மற்றும் உள் பகுதியில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் கூரையின் வழியாக தண்ணீர் ஒழு குவதால் அங்கு வசிப்போர், கட்டி டம் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடனே வாழ்ந்து வரு கின்றனர். மேலும், வீடுகள் இல்லா ததால் ஒரே வீட்டினுள் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வரும் அவல நிலையும் இருந்து வருகிறது. எனவே, இடிந்துவிழும் நிலையில் உள்ள வீடுகளை புதுப்பித்து தரவேண்டும். வீடுகள் இல்லாமல் தவித்து வரும் குடும்பங் களுக்கு புதிய வீடுகள் கட்டி தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக் கின்றனர்.