tamilnadu

img

தருமபுரி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீடு,வீடாக தீவிர வாக்குச்சேகரிப்பு

தருமபுரி, ஏப்.14-தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் வீடுவீடாக தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். அவர்களுக்கு ஆதரவாக ஞாயிறன்று திமுககூட்டணி கட்சிகளின் சார்பில்தருமபுரி நகரம் குமாரசாமிபேட்டை, நேதாஜிபைபாஸ்ரோடு, பேருந்து நிலையம், சேலம் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் திமுக நகரசெயலாளர் தங்கராசு, முன்னாள் கவுன்சிலர்கள் பி.மோகன், சுருளிராஜன், முல்லைவேந்தன், தங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் வி.பி.சாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் தருமபுரி ஒன்றியத்தில் இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டகுழு உறுப்பினர் கே.பூபதி, பி.பங்கஜம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.சுசிலா, எம்.மீனாட்சி மற்றும் தமிழ்மணி, செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.


இப்பிரச்சாரத்தில் ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா கிடைக்கவும், நீண்ட காலம் வீடு கட்டி குடியிருப்போருக்கு மனைப்பட்டா, ஒகேனக்கல் குடிநீர்கிடைக்கவும், 60 வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு பெறதருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனபிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டனர்.இதேபோல், பென்னாகரத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் நகரம் பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர்வெள்ளிங்கிரி, மாவட்ட குழு உறுப்பினர் பி.எம்.முருகேசன், திமுக நகர செயலாளர் வீரமணி, மாலயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிநகர செயலாளர் பாரதி உள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர்.பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாப்பாரப்பட்டி பகுதி செயலாளர் ஆர்.சின்னசாமி மற்றும் பகுதிகுழு உறுப்பினர்கள் லோகு, ஆர்.சக்திவேல் மற்றும் வாலிபர் சங்க சிலம்பரசன், திமுக நகர செயலாளர் பி.சண்முகம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் திருவேங்கடம் விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;