tamilnadu

டெங்கு கொசுப்புழு உற்பத்தி அரூரில் வணிக நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

தருமபுரி, அக்.16 - அரூரில், டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வணிக நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டு களிலும் தீவிர டெங்கு நோய் தடுப்பு பணிகள் நடை பெறுகிறது. இதில் நெகிழிப் பொருள்கள், டயர்கள், தேவையற்ற பொருள்களில் மழைநீர் தேங்குவதை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், அரூர்- சேலம் பிரதான சாலையில்  உள்ள வணிக நிறுவனங்கள், பழைய இரும்பு கிடங்கு களில் செயல் அலுவலர் கே.சேகர் தலைமையிலான பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த  ஆய்வின்போது, டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பது  தெரியவந்தது. இதையடுத்து, டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது.