tamilnadu

img

அருட்தந்தை ஸ்டான்சுவாமியை கைது செய்ததை கண்டித்து சமூக நல்லினக்கமேடை ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்டு வந்த அருட்தந்தை ஸ்டான்சுவாமியை கைது செய்ததை கண்டித்தும், அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியும் சமூக நல்லினக்க மேடை சார்பில் தருமபுரி பழைய ஆயர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நல்லினக்கமேடை பொறுப்பாளர் ஆர்.சிசுபாலன் தலைமை வகித்தார். இதில், முனைவர் லாரன்ஸ் பயாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், விசிக மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் யாசின்தென்றல்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.