தருமபுரி,டிச.16- தருமபுரி மாவட்டத்தில் உள் ளாட்சி தேர்தலில் திமுக கூட்ட ணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக் கல் செய்தனர் தருமபுரி மாவட்டம், அரூர் ஒன் றியம், வீரப்பநாய்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வள்ளியம்மாள் நாக ராஜன் வேட்புமனு தாக்கல் செய் தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், ஒன்றிய செயலாளர் ஆர்.மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். தருமபுரி ஒன்றியம், செம்மான்ட குப்பம் ஊராட்சி ஒன்றிய உறுப்பி னருக்கு சிபிஎம் வேட்பாளர் கே. கோவிந்தசாமி வேட்பு மனுதாக் கல்செய்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. எஸ்.ராமச்சந்திரன், ஒன்றிய செய லாளர் என்.கந்தசாமி உள்ளிட் டோர் உடனிருந்தனர். பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம், மெனசி ஊராட்சி ஒன்றிய உறுப் பினருக்கு சிபிஎம் வேட்பாளர் லட் சுமிவஞ்சி வேட்பு மனுதாக்கல் செய் தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, வட்ட செயலாளர் சி.வஞ்சி உள் ளிட்ட பலர் உடனிருந்தனர். வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ. கண்ணகி அம்புரோஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, வட்டசெயலாளர் சி. வஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றி யம் காட்டேரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு சிபிஎம் வேட்பா ளர் வி.கோவிந்தசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் அழகிரி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.அண்ணா மலை ஆகியோர் உடனிருந்தனர்.