tamilnadu

img

சிறையில் மரணமடைந்த மதன்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்ணா

தருமபுரி, செப்.14- சிறையில் மரணமடைந்த மதன்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊத்தங்கரை அண்ணாசிலை அருகில் சனியன்று தர்ணா போராட்டம் நடை பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் ்பள்ளி வட்டம் புளியாண்டப்பட்டி கிராமம்  தலித் சமுகத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் மதன்குமார் (20). இவரை செப்டம்பர் 5ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி குற்றப் பிரிவு காவலர்கள் வழக்கு ஒன்றின் பேரில்  விசாரணைக்காக அழைத்து சென்றுள் ளனர். இதன்பின் செப்டம்பர் 8ஆம்  தேதியன்று ஊத்தங்கரை மருத்துவ மனையில் மதன்குமாரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையறிந்த அவரின்  பெற்றோர் அதிர்ச்சியடைந்து மருத்துவ மனைக்கு சென்ற நிலையில், மதன்குமார் இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரி வித்துள்ளனர். ஆனால், கிருஷ்ணகிரி காவல்நிலைய சிறையில் வைக்கப் பட்டு மதன்குமார் அடித்துக் கொல்லப்பட் டுள்ளதாக கூறி அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இந்நிலையில், மதன்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஊத்தங்கரை மருத்துவமனை அருகில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நீதி கேட்டு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா விற்கு வட்டச் செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலகுழு உறுப் பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செய லாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், நஞ்சுண்டன்,  கோவிந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் அண்ணாமலை, பாஞ்சாலராஜன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர். முடிவில் சிங்காரப்பேட்டை  பகுதிக்குழு செயலாளர் எத்திராஜ் நன்றி கூறினார்.