tamilnadu

img

தோழர் கே.எம்.ஹரிபட் நினைவுதினம் அனுசரிப்பு

தருமபுரி, ஜன. 22- தோழர் கே.எம். ஹரிபட் நினைவு தினத் தையொட்டி தருமபுரி, செங்கொடிபுரத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்தின் செய லாளராக செயல்பட்டவர் தோழர் கே.எம்.ஹரிபட். மேலும், சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம், ஓட்டல் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிறுவன தலைவர்களில் ஒருவராவார். தொழிலாளர் உரிமைக ளுக்காகவும், மக்களின் அடிப்படை பிரச் சனைகளுக்காகவும் பல்வேறு போராட்டங் களை தலைமை தாங்கி நடத்தி சிறை சென்ற வர். இவரின் நினைவு தினத்தையொட்டி (ஜன.22) புதனன்று தருமபுரி செங்கொ டிபுரத்தில் தோழரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரி முத்து, ஆர். சிசுபாலன், கே.என்.மல்லை யன், சோ.அருச்சுணன்,டி.எஸ்.ராமச்சந் திரன், வே.விசுவநாதன், நகரசெயலாளர் ஆர்.ஜோதிபாசு, அரூர் ஒன்றிய செயலா ளர் ஆர்.மல்லிகா,மாவட்ட குழு உறுப்பி னர் டி.சேகர், தமுஎகச மாநிலக்குழு உறுப் பினர் நாகைபாலு உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

;