tamilnadu

img

மழைகாலம் துவங்கும்முன் குடிமராமத்து பணிகள் நிறைவுபெறும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி, ஜூலை 30- தருமபுரி மாவட்டத்தில்  ரூ 4.97 கோடி  மதிப்பில் நடைபெற்று வரும்  10 ஏரி குடி மராமத்து பணிகள் மழைகாலம் துவங்கும் முன் நிறைவுபெறும் என மாவட்ட ஆட்சி யர் எஸ்.மலர்விழி தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில், 2016-17 ஆம் ஆண்டில் ஏரிகள், குளங்கள், குடிமராமத்து பணிகளுக்காக 21 ஏரிகளுக்கு ரூ.158  லட்சம் செலவிலும், 2017-18-ம் ஆண்டில்  10 ஏரிகளுக்கு ரூ.327.65 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப் பட்டது. மாவட்டத்தில் நடப்பாண்டில் அன்னசாகரம் ஏரிக்கு ரூ.70 லட்சமும், சோகத்தூர் ஏரிக்கு ரூ.44 லட்சமும், கொள கத்தூர் சோழராயன் ஏரிக்கு ரூ.47.50 லட் சமும், கொளநாச்சியம்மன் ஏரிக்கு ரூ. 36.70 லட்சமும், காரிமங்கலம் வட்டத் திற்குட்பட்ட, சிக்கதிம்மன அள்ளி  ஏரிக்கு ரூ.41 லட்சமும், நல்லம்பள்ளி  வட்டத்திற்குட்பட்ட அதியமான் கோட்டை ஏரி ரூ. 48 லட்சமும், பாலவாடி ஏரிக்கு ரூ.55.50 லட்சமும், பாலக்கோடு  வட்டத்திற்குட்பட்ட  பனங்கள்ளி ஏரிக்கு  ரூ. 54.50 லட்சமும், புலிக்கல் ஏரிக்கு ரூ.50 லட்சமும், செங்கன்பசுவந்தலாவ் ஏரிக்கு ரூ.49.80 லட்சமும் என மொத்தம் 10 ஏரி களில் குடிமாரமத்து பணிகளை மேற் கொள்ள ரூ.4.97 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சோகத்தூர் ஏரி, கொள நாச்சியம்மன் ஏரி, சிக்கதிம்மன அள்ளி ஏரி ஆகியவற்றை  பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது, பாசன விவசாயிகள் சங்கம் அமைத்து 50 சதவி கிதத்திற்க்கும் மேல் உள்ள உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள சங்கங்கள் 10 சதவிகிதம்  பங்களிப்புடன், பணம்,பொருள் அல்லது உடல் உழைப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பங்களிப்பாக அளிப்பார்கள். ஏரியில் உள்ள சீமைகருவேலம் மரங்களை அகற்றுதல்,ஏரியை தூர்வாரி கரையை மேம்படுத்துதல், வாய்கால், உபரிநீர் வழியை சீர்படுத்துதல்,மதகுகள், கண்மாய் கள் சீரமைத்தல், பாசன கால்வாய் மேம் படுத்துதல்,புணரமைத்தல் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய பயண்பாட்டிற்கு அனுமதி யோடு வண்டல் மண் வழங்கபடும், குடிமராமத்துபணிகள் மேற்கொள்ளப்படு வதால்,ஏரியின் அருகில் உள்ள கிணறுகள் நீர்மட்டம் உயரும், மழைகாலம் துவங் குவதற்கு முன்பே இப்பணிகளை திட்ட மிட்டு முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்தார்.