tamilnadu

img

அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு அருந்ததிய மக்கள் மனு

தருமபுரி, அக்.12- அரசு கட்டித்தரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக் கித் தருமாறு அஸ்தகிரியூர் பெரமாண்டப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் அஸ்தகிரி யூர் பெரமாண்டப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இம் மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்துதான் குடும்பத்தை பராமரித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பால னோருக்கு சொந்த வீடோ, வீட்டுமனையோ, விவசாய நிலமோ இல்லை. ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங் கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அரசு ஏழை மக்க ளுக்கு அடுக்குமாடி கட்டிடம் கட்டி அதில் வீடுகள் ஒதுக்கப் படும் என அறிவித்துள்ளது. எனவே, அஸ்தகிரியூர் பெர மாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்க ளுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்த னர்.