தருமபுரி, அக்.4- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டக்குழு உறுப்பி னரும், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான அரூர் தோழர் எஸ்.பி.சின்ன ராசு காலமானார். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் சங்கிவாடி கிராமத்தைச் சேரந்தவர் எஸ்.பி.சின்னராசு (56). இவர் 1979 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைத்து கொண்டார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட அமைப்பாளராகவும், மாநிலகுழு உறுப்பின ராகவும் பொறுப்பு வகித்தார். மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், அரூர் பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். இவர் அக்.4 ஆம் தேதி (வியாழனன்று) மாரடைப்பால் காலமானார். இவரது உடல் நல்டக்கம் இன்று (அக்.5 ஆம் தேதி) அவரது சொந்த ஊரான சங்கிலிவாடி கிராமத்தில் நடைபெற உள்ளது. தோழர் எஸ்.பி.சின்னராசு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்டக் குழுக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.