தருமபுரி, ஆக. 18- பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கரி சுரங்கங்களை தனியா ருக்கு விற்கக்கூடாது. அரசு வங்கி, எல்ஐசி, ராணுவ தளவாட தொழிற் சாலை, ரயில்வே ஆகியவற்றை தனி யார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மின்சார சட்டம் 2020-ஐ அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங் கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக தருமபுரி யில் தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலகுழு உறுப்பினர் ஜி.நாகராஜன் தலைமை வகித்தார். இதில், மாநில செயலாளர் சி.நாகரா சன், மாவட்டத் தலைவர் பி.ஜீவா, எல்பிஎப் மாவட்ட தலைவர்கள் ஜே.பழனி, அன்புமணி, ஐஎன்டி யுசி மாவட்ட தலைவர்கள் ராஜேந்தி ரன், தங்கவேல், ஏஐடியுசி மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட செயலாளர் பி.மணி, ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் முருகன், கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் முரு கேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் மின்வா ரிய அலுவலகங்கள் முன்பு மின்வா ரிய தொழிற்சங்கள் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் மு.சுப்ரமணி, செயலா ளர் மு.ராமகிருஷ்ணன், தொழிலா ளர் சம்மேளன நிர்வாகிகள் ப.ரஞ் சித்,சாலி, மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் நிர்வாகி வீ.வீரப்பன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசிற் கெதிரான முழக்கங்களை எழுப்பி னர்.
சேலம்
சேலம் உருக்காலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு உருக்காலை தொழிலாளர் சங்க செயலாளர் சுரேஷ்குமார், தொமுச செயலாளர் பெருமாள், ஐஎன்டியுசி செயலாளர் தேவராஜன், சிஐடியு பொருளாளர் பாலாஜி, துணைப் பொது செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.