tamilnadu

img

உண்மையான தர்ம யுத்தம் ஜன.8 வேலைநிறுத்தம்

திண்டுக்கல், டிச.20 பொய் மூட்டைகளுக்குச் சொந்தக்காரர் மோடி என்றும், மோடியின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான உண்மையான தர்மயுத்தம் ஜனவரி 8 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் என்றும் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். திண்டுக்கல்லில் வியாழனன்று  அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) அலுவலக புதிய கட்டடத்தையும், தோழர்  வி.பி.சிந்தனின் உருவச்சிலையையும் திறந்து வைத்து அவர் பேசியதாவது:  மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு வரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவ தாகத் தெரிவித்தார்.  இதுவரை போடவில்லை. அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் மூட்டைகள் தான். ஒட்டு மொத்த பொய் மூட்டை களுக்குச் சொந்தக்காரர் மோடி. முதலாளிகளுக்கு  இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை வழங்கியுள்ளார்.

ஏழை மக்கள் மீது  வரிச் சுமையை ஏற்றுகிறார். செல்வத்தை உற்பத்தி செய் பவர்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன் என்கிறார் மோடி. செல்வத்தை உற்பத்தி செய்வது உழைப்பாளி வர்க்கம் தான். ஆனால்  பிரதமர், செல்வத்தை உற்பத்தி செய்பவர்கள் முதலாளிகள் என்று தலைகீழாக பேசுகிறார். பிரதமரின் பேச்சைக் கேட்டு அவரது விசுவாசிகள் ஏமாறலாம். உழைப்பாளி வர்க்கம் ஏமாறாது.  மக்களை மதரீதியாக பிளவுபடுத்தக்கூடிய குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து விட்டு கூட்டணி தர்மத்துக்காக வாக்களித்தோம் என்று பாமக தலைவர் ராமதாஸ் சொல்கிறார். இது கூட்டணி தர்மம் அல்ல, அதர்மம்.  இந்தியா மதச்சார்பற்ற  நாடு என்பதை நாம் தொடர்ந்து மக்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது. பாஜக போன்ற மதவெறி சக்திகளுக்கு எதிராகவும், அவர்கள் கடைப்பிடிக்கும் மோசமான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராட வேண்டும். அதற்காக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக வருகிற ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் முழுமையாக தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும். இது தான் உண்மையான தர்மயுத்தம். இவ்வாறு அவர் பேசினார்.