tamilnadu

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ

தேனி, மே 28 -தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் அரிய வகை மற்றும் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாயின.சின்னூர், பொரியூர் வனப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத் தீ பற்றி கொளுந்து விட்டு எரிந்து வரு கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் தீயில் எரிந்து சாம்பலாகி வருகின்றன. மேலும் இந்த தீயானது  வனவிலங்கு களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உள்ளதால் வனத்துறையினர் காட்டுத் தீயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

;