தூத்துக்குடி, ஜூன் 5-குஜராத் மாநிலம் ஒக்கா-வில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து செல்லும்விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்படும் நிலை இருப்பதாக தெற்குரயில்வே கோட்ட தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத்மாநிலம் ஒக்கா துறைமுக நகரத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுக நகருக்கு வாரம் ஒருமுறை இயக்கப் படுகிறது. இந்த ரயில் 2710 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இது குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கி மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என ஆறு மாநிலங்கள் வழியாக நீண்ட தூர பயணத்தை மேற்கொள்கிறது.விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், ஒக்காவில் இருந்து வாரந்தோறும் வியாழக் கிழமை இரவு 11.55 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மொத்தம் 20 பெட்டிகளோடு சுமார் 1500 பயணி களுடன் 5 மாநிலங்களை கடந்து தூத்துக்குடி ரயில் நிலையத்தை ஞாயிற்றுக் கிழமை காலை 7.10 மணிக்கு வந்தடைகிறது.பின்னர் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வியாழன் அதிகாலை 1.35 மணிக்கு குஜராத் மாநிலம் ஒக்காவிற்கு சென்றடை கிறது.தூத்துக்குடியில் இருந்து அதிக தூரம் இயங்கக்கூடிய ஒரே ரயில் விவேக்எக்ஸ்பிரஸ்தான் என்பது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட உள்ளதாகவும், தூத்துக்குடி வரை இயக்கப்படாது எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு கிளம்பும் ரயிலின் துரித பராமரிப்பு பணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மட்டுமே இடம் உள்ளது. ஆகையால் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு துரித பராமரிப்பு பணி செய்யபோதிய இடவசதி இல்லை. எனவே விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை ரயில் நிலையத்தோடு நிறுத்தி அங்கிருந்து மீண்டும் ஒக்காவிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.பிற மாநிலங்களுக்கு செல்வதற்கு ரயிலில் மட்டுமே கட்டணம் குறைவாகவும், போதிய பயண வசதியும் உள்ளது. இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு தூத்துக்குடி யில் இருந்து செல்ல விவேக் எக்ஸ் பிரஸ் ரயில் மிகவும் உதவியாக இருந்தது.அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் தொழில், வர்த்தக ரீதியான நகரம். இங்கு பல்வேறு மாநிலத்தை சார்ந்த பல தரப்பினர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயில் சேவை, தொழில் நகரங்களான குஜராத் மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.