tamilnadu

img

ரயில் பயணியை அவமதித்த டிக்கெட் பரிசோதகருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

சென்னை, செப்.3- ரயில் பயணியை அவமதித்த டிக்கெட்  பரிசோதகருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சேலத்திலிருந்து சென்னை செல்லும் ‘கோவை எக்ஸ்பிரஸ்’ ரயிலில் கடந்த 2014  ஆம் ஆண்டு தியாகராஜன் என்பவர் ஏறினார்.  சாதாரண பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்த அவர் டிக்கெட் பரிசோத கரிடம் ரிசர்வ் கோச்சில் இருக்கை ஒதுக்கு மாறு கேட்டார். அதற்கு டிக்கெட் பரிசோத கர் ரூ.200 கேட்டுள்ளார். உடனே தியாக ராஜன் ரூ.200 தந்தால் அதற்குரிய ரசீது  வேண்டும் எனக் கேட்டார். இது டிக்கெட்  பரிசோதகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி யுள்ளது. சாதாரண டிக்கெட் எடுத்து விட்டு முன்பதிவு பெட்டியில் ஏறியதற்காக அபரா தம் விதிக்கப்போவதாக அவர் மிரட்டிய தாகக் கூறப்படுகிறது. அப்போது டிக்கெட் பரிசோதகர் பெயருடன் கூடிய பேட்ஜ் அணிந்திருக்கவில்லை.

இதைத்தொடர்ந்து டிக்கெட் பரிசோத கர் மீது தென்னக ரயில்வேயில் புகார் தெரி வித்த தியாகராஜன் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். எனினும் ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே தியாகராஜன் சென்னையில் உள்ள மாவட்ட ரயில்வே சமரச தீர்வு மையத்தில் புகார் செய்தார். அதில் டிக்கெட்  பரிசோதகரால் அவமதிக்கப்பட்ட தனக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். முன்னதாக தியாகராஜன் தான் பயணம் செய்த அன்று  கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த காலி இடங்கள் உள்ளிட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக சேகரித்திருந்தார். அதில் சம்பவத்தன்று அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 7  இருக்கைகள் காலியாக இருந்தது தெரிய  வந்தது. எனினும் டிக்கெட் பரிசோதகர், தியாகராஜனுக்கு இருக்கை ஒதுக்க வில்லை. இதையடுத்து தென்னக ரயில்வே  பொது மேலாளர் மற்றும் டிக்கெட் பரிசோத கர் இணைந்து தியாகராஜனுக்கு ரூ.15 ஆயி ரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.