சென்னை, ஜூலை 15 - தீக்கதிர் நாளிதழின் காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் இ.ராமநாதன் கொரோனா தொற்று காரணமாக புதனன்று (ஜூலை 15) காலமானார். அவருக்கு வயது 52. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காஞ்சிபுரம் நகர நிர்வாகியாக செயல்பட் டார். அப்போது மக்கள் நலன் சார்ந்த ஏராளமான போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய அவர், காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் நகரக்குழு உறுப்பினரான இ. ராமநாதன், தற்போது தீக்கதிர் நாளித ழின் மாவட்ட செய்தியாளராகவும், வெளிச்சம் தொலைக்காட்சி, சத்தியம் தொலைக்காட்சி செய்தியாளராகவும் பணியாற்றி வந்தார்.
கடந்த 4ந் தேதி கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டார். அதன்பின்னர் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோழர் இ.ராமநாதனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும் தனுஷ் (18), ஆர்த்தன் (14) என இரண்டு மகன்களும் உள்ளனர்.
இரங்கல்
தோழர் ராமநாதன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், தீக்க திர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், சென்னை பதிப்பு மேலாளர் சி.கல்யாண சுந்தரம், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பின ர்கள் எஸ்.கண்ணன், பிரமிளா, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், காஞ்சி புரம் நகரச் செயலாளர் சி.சங்கர், சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமார், தீக்கதிர் பொறுப்பாசிரியர்கள் அ.விஜய குமார் (சென்னை), எஸ்.பி.ராஜேந்திரன் (மதுரை), கண்ணன் (எண்மபதிப்பு) ராஜா (கோவை), தலைமை நிருபர் ஸ்ரீராமுலு, மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் புருஷோத்தமன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், சென்னை பத்திரிகையாளர்மன்ற இணைச்செயலாளர் பாரதிதமிழன், காஞ்சி புரம் தலைமையிடத்து பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கேசவன் உள்ளிட்ட அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள் ளன. அன்னாரது உடல் காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.