tamilnadu

img

தமிழ்ப் பல்கலை. பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு

முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர், நவ.20- தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப்  பல்கலைக் கழகத்தில் முறை கேடாக பேராசிரியர் நியமனம் செய்தது தொடர்பாக, முன்னாள்  துணை வேந்தர், முன்னாள் பதிவா ளர் உள்பட நான்கு பேர் மீது லஞ்ச  ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்  கழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஜி.பாஸ்கரன் பதவி வகித்தார். அந்த மூன்று  ஆண்டில் தகுதியற்ற நபர்களை யும், பல்கலைக் கழக விதிமுறை களை பின்பற்றாமலும் பேராசிரி யர் பணியிடங்கள் நியமனம்  செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு கள் எழுந்தன. அதன் அடிப்படை யில், லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு பல்கலைக்கழகம் சார்பில், சரி யான ஒத்துழைப்பு அளிக்க வில்லை.

இதையடுத்து ஓய்வு பெற்ற பேராசிரியர் முருகேசன் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆகிய இரு வரும் தனித் தனியாக சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில், பொது நல வழக்கு தாக்கல்  செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனவும் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து பல்கலைக்கழ கத்தில் பல்வேறு கட்ட விசார ணைக்கு பிறகு, லஞ்ச ஒழிப்பு துறையினர் சில ஆவணங்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்ப டைத்தனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்பு துறை, கடந்த 14-ஆம் தேதி, பேரா சிரியர் நியமனத்தில் முறை கேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள்  துணை வேந்தர் ஜி.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் எஸ்.முத்துக்குமார், பதிவாளரின் நேர்முக உதவியாளர் ஜி.சக்தி சரவணன் மற்றும் தொலைதூர கல்வி இயக்ககத்தின் இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு  காவல் ஆய்வாளர் வெங்கடே சன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த முதல் தகவல் அறிக்கையில், “கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை துணை வேந்தராக இருந்த பாஸ்கரன், கடந்த 2017 ஏப்ரல் 26-ஆம் தேதி  27 பேராசிரியர்கள், 18 இணை பேராசிரியர்கள் என மொத்தம் 45 பணிக்கான தேர்வு தொடர்பான விளம்பரம் அறிவிக்கப்பட்டு, பல்கலைக்கழக குழு சார்பில் தேர்வு நடைபெற்றது. அதில் 23  பேர் மட்டுமே முறையாக தேர்வு  செய்யப்பட்டனர். மீதமுள்ள 22 நபர்களும் பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாகவும், தகுதி யற்ற நபர்களையும் துணை வேந்தர் அறிவுறுத்தியதன் பெய ரில் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு துறைகளில் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், துணைவேந்தர் பாஸ்கரன் நேரடியாக 5 பேரை நிய மனம் செய்வதற்காக பதிவாளர் நேர்முக உதவியாளர் சக்தி சரவ ணன் மூலம் ரூ. 15 லட்சம் முதல்  40 லட்சம் ரூபாய் பணம் வரை  லஞ்ச பணத்தை கேட்டு பெற முயற்சித்ததாகவும், மேலும் ஆசிரி யர்கள் அல்லாத பல்வேறு பணி களுக்கு 70 பேரை முறைகேடாக  பதிவாளர் முத்துக்குமார், தொலைதூர கல்வி இயக்க கத்தின் இயக்குநர் என்.பாஸ்க ரன் இருவரும், துணைவேந்தர் பாஸ்கரனின் ஒப்புதல் பெற்று,  அதற்கான லஞ்ச பணத்தை தருவ தாக பேசி நியமனம் செய்துள்ள தாகவும்" கூறப்பட்டுள்ளது.

;