சென்னை, நவ. 7- மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதா உடல் மெரினா கடற்கரை யில் உள்ள எம்.ஜி.ஆர். நினை விடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஜெய லலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அத்துடன் எம்.ஜி.ஆர். சமாதியை புதுப்பிக் கும் பணிகளும் நடந்து வரு கின்றன. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பீனிக்ஸ் பறவை போன்ற வடி வில் கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான கட்டுமான வடிவ மைப்பை சென்னை ஐ.ஐ.டி. மற்றும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவை செய்து கொடுத்துள்ளன. துபாயில் இருந்து கொண்டு வரப்பட்ட கட்டுமான சாதனங் களை பயன்படுத்தி பணிகள் நடக்கின்றன. இங்கு ஜெயலலிதா புகைப்பட கண்காட்சி, வீடியோ அருங்காட்சியகம் ஆகியவை அமைய உள்ளன. பீனிக்ஸ் பறவை கட்டிடத்துக்கு வெளியே சிங்கம் சிலை அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகி யோர் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது நினை விடத்தின் முகப்பில் ஜெயலலிதா சிலை இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவுக்கு மார்பளவு சிலை வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.