திருச்சிராப்பள்ளி, மே 31-அரசுப்பள்ளிகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களி லிருந்து மே 25-ஆம் தேதி புறப்பட்டஇந்திய மாணவர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சாரப் பயணக்குழுக் கள் வெள்ளியன்று திருச்சிராப்பள்ளி யில் சங்கமித்தன.சென்னையிலிருந்து மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சந்திப்பில் இருந்து மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மத்தியக்குழு உறுப்பினர் சத்யா, கோயம்புத்தூரிலிருந்து மாணவர் சங்கமாநில துணைத் தலைவர்நிருபன் சக்கரவர்த்தி, மத்தியக் குழு உறுப்பினர் காவியா, கடலூரிலிருந்து மாநில துணைச் செயலாளர்ஏ.பிரகாஷ், மாநில துணைத் தலை வர் எம்.கண்ணன் ஆகியோர் தலை மையில் புறப்பட்ட மாணவர்கள், பயணக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுமார் 1,500 கி.மீ. பயணம் செய்து வெள்ளியன்று திருச்சிராப்பள்ளியில் சங்கமமாயினர். பயணக்குழு தலைவர்களுக்கும் குழுவில் பங்கேற்றவர்களுக்கும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.இந்த பயணத்தின்போது, மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு ஆறு விழுக்காடு நிதி ஒதுக்க வேண்டும், நவீன கல்விச்சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டம், கற்றல், கற்பித்தல் முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும்; கட்டாயக் கல்விஉரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக்குழுக்களை அமைக்க வேண்டும்;
அரசாணை 270-இன்படி 20 மாணவர்களுக்கு ஒரு குடிநீர் குழாய், ஒரு கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்; தனியார் பள்ளிகளுக்கான மாணவர் எண்ணிக்கை யை நிர்ணயிக்க வேண்டும்; மாசிலாமணி கமிட்டி பரிந்துரையை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசுப்பள்ளிகளை மூடும் முயற்சியை கைவிட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு பஸ் பாஸ், மடிக்கணினி, மிதிவண்டி, கல்வி உதவித் தொகை ஆகியவற்றை கல்வியாண்டின் துவக்கத்திலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர். மாணவர் சங்கத்தின் சைக்கிள் பயணக் குழுவினர், திருச்சி மாநக ராட்சி பள்ளிகளில் முதலிடம் பெற்ற செந்தண்ணீர்புரம் அரசு மாநகராட்சி பள்ளி மாணவி கீர்த்தனா பொதுத் தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அவரை மாணவர் சங்கத்தினர் பாராட்டி கெளரவித்தனர். அரசு பள்ளிகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் முழுவதுமிருந்து மாணவர் சங்கத்தினர் பிடி மண்எடுத்து வந்திருந்தனர். சைக்கிள் பிரச்சார பயணத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவி கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். வெள்ளியன்று திருச்சியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருச்சியில் சங்கமித்தபயணக் குழுவினரை மாணவர் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் சேதுபதி, மாவட்டச் செய லாளர் மோகன் மற்றும் பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வர வேற்று கெளரவித்தனர். பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் மாணவர் சங்க கொடிகளால் வெண்மயமாக காட்சியளித்தது. குறிப்பாக இந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டது. இந்திய மாணவர் சங்கத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்திருந்தது.இந்திய கன்னியாகுமரியில் இருந்து வந்த சைக்கிள் பேரணிக்கு திருச்சி ஆலம்பட்டி புதூரில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெயபால், ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கடலூரில் இருந்து வந்த சைக்கிள் பேரணிக்கு திருச்சி குண்டூர் பர்மா காலனி பகுதியில் சிபிஎம் பொன்மலை பகுதிச் செயலாளர்கார்த்திகேயன், துப்புரவுத் தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் இருந்து வந்த சைக்கிள் பேரணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம்பகுதியில் சிபிஎம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, ஆட்டோ சங்க ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் மாணிக்கம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.