tamilnadu

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: அமைச்சர் ஆலோசனை

சென்னை, ஜன. 29- டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு விவகா ரம் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்  தங்கள் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் வியாழ னன்று(ஜன.29)ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசா ரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறை கேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வரு கின்றனர்.  இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இந்த விவகாரம் குறித்து அமைச் சர் டி.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் ஸ்வர்ணா, டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;