சென்னை, ஆக. 20- அத்தி வரதர் தரிசனம் இறுதி நாளன்று நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்த ஜெயா டிவி குழுவினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உறுதி யளித்துள்ளார். காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தின் இறுதி நாளன்று காலை ஜெயா டிவி தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் ஒளிப் பதிவாளர் வருண்குமார் ஆகியோரை எஸ்பி வருண்குமார் கண்முடித்தனமாக தாக்கி னார். இத்தாக்குதலில் ஈடுபட்ட ஐபிஎஸ் அதி காரி வருண்குமார் மற்றும் தலைமை காவ லர்கள் ஆகியோரை சஸ்பென்ட் செய்ய வேண்டும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து ஊடகத்துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் (டிஜிபி) திரிபாதி அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனுஅளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் காவல்துறை எஸ்பி.வருண் பேஸ்புக்கில் பதிவிட்டது சரியான அணுகு முறை இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். காவல்துறையினர் பத்திரிகையாளர்களுடன் இனிமோதல்போக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும், ஊடகவியலாளர் மற்றும் காவல்துறையினருடன் நட்புறவு ஏற்படுத்த வழிவகை செய்யப்படும் என்றார் இந்த சந்திப்பின் போது பாரதிதமிழன், அன்பு, அசத்துல்லா, சண்முகவேல், ரவிச்சந்திர ஹாசன், மமீ.ஜாபர், அண்ணாதுரை, சகாய ராஜ், சபீர் முகமது, யூசப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.