சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி,செப். 4 - தமிழ் தெரியாத ஊழியர்களை ரயில்வே கமர்ஷியல் பிரிவுகளில் பணி அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே கோட்ட நிர்வாகிகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி, மதுரை ரயில்வே கோட்டத் திற்குட்பட்ட எம்பிகளுடன் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகுல்ஜெயின் தலைமையில் திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார், மதுரை கோட்ட மேலாளர் லெனின் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே பயிற்சி பள்ளியில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுரை சு.வெங்கடே சன், திருச்சி சிவா, கரூர் ஜோதிமணி, பெரம்பலூர் பாரிவேந்தர், மயிலாடு துறை செ.ராமலிங்கம் உள்பட பல எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை விரைவு படுத்துதல், புதிதாக ரயில் விடவும், கூடுதல் ரயில் விடவும், பயணிகள் விடுத்துள்ள கோரிக்கைகள், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பேசினர். இதையடுத்து தற்போது தென்னக ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் என்னென்ன திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது; அந்த திட்டங்கள் எப்போது நிறைவு பெறும் என்பது குறித்து பொதுமேலாளர் ராகுல்ஜெயின் விளக்கம் அளித்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:
கடந்த ஜூன் மாதம் 14 அன்று, தமிழகத்தில் உள்ள ரயில்வே கோட்டங்களைச் சேர்ந்த நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர் களுக்கு, அவர்கள் மண்டல அலுவல கத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தால் பெரும் சர்ச்சையும் எதிர்ப்பும் எழுந்தது. அதைத்தொடர்ந்து அந்த உத்தரவு பெறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலைய அதிகாரி கள் உள்பட ரயில்வேயின் அனைத்து முக்கியப் பிரிவுகளிலும் தமிழ் தெரி யாத - இந்தி மட்டுமே பேசுகிற வடமாநி லங்களைச் சேர்ந்த ஏராளமான ஊழி யர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ள னர். குறிப்பாக திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் மொத்தம் 492 நிலைய அதிகாரிகள் (ஸ்டேசன் மாஸ்டர்) உள்ளனர்; இவர்களில் 247 பேர் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில்நிலையங்களில் மொத்தம் 483 நிலைய அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் 220 பேர் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதேபோல திருச்சி மற்றும் மதுரை கோட்டங்களில் கமர்சியல் பிரிவு களில் - அதாவது வணிகப் பணிகளில் தமிழ் தெரியாத, 160க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இடம்பெற்றி ருக்கிறார்கள். பயணச்சீட்டு கொடுக் கும் கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்யும் கவுண்ட்டர்கள், பார்சல் கிளர்க், புக்கிங் கிளர்க், முன்பதிவு கிளர்க் மற்றும் ரயிலில் டிக்கெட் பரிசோத கர்கள் போன்ற அன்றாடம் மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய பணி களில் தமிழ் தெரியாதவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த பயணிகள் இவர்களிடம் உரையாடுவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
தமிழ் தெரியாத அலுவலர்களோடு தான் அன்றாடம் பல லட்சக்கணக்கான பயணிகள் உரையாடவும், விபரங் களைப் பெறவும், டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பரி மாறிக் கொள்ளவும் வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்திற்குள்ளேயே பயணம் செய்யும்போது கூட தமிழ் தெரியாத பெருவாரியான அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளோடு தமிழ் மட்டுமே தெரிந்த ரயில் பயணிகள் உரையாட வேண்டியிருப்பதும் புரியாமல் அல்லது புரிய வைக்க முடியாமல் திணறுவதும் அன்றாட காட்சிகளாக மாறியுள்ளன. எனவே இந்த அவலநிலையை தவிர்க்கும் விதமாக, இத்தகைய ஊழியர்களை அன்றாட மக்கள் தொடர்புள்ள கமர்சியல் பிரிவுகளில் பணியமர்த்துவதில் சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகங்கள் தவிர்த்திட வேண்டும்; அதேபோல காலியாக உள்ள இத்தகைய பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களை வேலைக்கு எடுக்கவும், நியமிக்கவுமான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் உடனிருந்தார்.