tamilnadu

img

அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பது சட்டத்துக்கு புறம்பானதல்ல

அரசு ஊழியர்கள் குறித்து திரிபுரா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

அகர்தலா, ஜன.11- அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற் பது  சட்டத்துக்கு புறம்பானதல்ல என்று திரிபுரா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்ப ளித்துள்ளது.  திரிபுரா மீன்வளத்துறை அதிகாரி யான லிபிகா பால் 2018 ஆம் ஆண்டு ஏப் ரல் மாதம் ஓய்வு பெறவுள்ளார். ஓய்வு பெறுவதற்கு 4 நாள்கள் இருந்த நிலை யில்,  அரசியல் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட காரணத்துக்காகவும், பாஜக வுக்கு எதிராக சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்ட காரணத்துக் காகவும் பணியிலிருந்து நீக்கம் செய்யப் பட்டார்.  அவருக்கு எதிராக விசாரணை கோரி திரிபுரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை  தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதி மன்றம், அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டதை வைத்து மட்டும், அரசிய லில் அரசு ஊழியர் ஈடுபாடு கொண்டுள் ளார் என முடிவு செய்ய முடியாது என்றும் அரசு ஊழியர்கள் சுதந்திரமாக சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிடலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 

;