tamilnadu

img

விவசாயப் பொருள் கொள்முதலுக்கு தடை நீக்கம்: தமிழக அரசு

சென்னை,மார்ச் 29- விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்க ளில் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் விவ சாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.