லாபவரியை குறைத்துவிட்டால் பெருமுதலாளிகள் கூடுதல் முதலீடுகள் செய்வார்கள் என்பது பெருமுதலாளி வர்க்கம் அரசிடம் இருந்து கூடுதல் சலுகைகளைப்பெற தொடர்ந்து முன்வைத்து வரும் கதையாடல். நாட்டின் சந்தையிலோ, பன்னாட்டுச் சந்தைகளிலோ, கிராக்கி அதிகரிக்காமல் தனியார் முதலீடுகள் அதிகரிப்பு என்பது நடக்காது.
பொருளாதார மந்தநிலை பற்றி 2019 ஆகஸ்ட் இறுதியில் தீக்கதிரில் விளக்கமாக இரு கட்டுரைகள் எழுதியி ருந்தோம். ஒரு மாதம் கடந்தபின்னும் நெருக்கடியை எதிர்கொள்வதில் முன்னேற்றம் இல்லை என்பது மட்டுமல்ல; மந்த நிலை தீவிரமடைந்து வருகிறது. 2019 ஜூலை முதல் செப்டம்பர் முடிய மூன்று மாதங்க ளில் நாட்டின் எட்டு முக்கியமான துறைகளின் உற்பத்தி சுருங்கியுள்ளது. ஆட்டோ துறைகளிலும் பல்வேறு நுகர்வுசார் துறைகளிலும் மந்தநிலை தொடர்கிறது. வேளாண்குடிகளின் துயரம் தொடர்கிறது. வேலையின்மை நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் அதிகரித்து வருகிறது. தொடரும் மந்தநிலையின் பிரதிபலிப்பாக ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரிவருமானம் மேலும் சரிந்துள்ளது. ஆனால் மத்திய பாஜக அரசு திகைத்து நிற்கிறதே தவிர தீர்வைத்தேடவில்லை. வேறு பல தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பி மக்களை திசை திருப்புகிறது. இந்தி மொழி தான் இந்தியாவின் ஒற்றை மொழியாகவேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறு கிறார். “பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் தோற்றுவிட்டது” என்று கூறி பாஜக அரசின் சர்வாதிகார நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துகிறார். 2௦21க்குள் சிறுபான்மை மக்களற்ற இந்தியா உருவாகும் என்று இன்னொரு பாஜக தலைவர் பேசுகிறார். மகாத்மா காந்தியைக்கொன்ற கோட்சேயின் வாரிசுகள் கோட்சேக்கும் கோவில் கட்டுகின்றனர், காந்தி ஜெயந்தியிலும் பொய்களையும் புரட்டுகளையும் பேசி வருகின்றனர். பாஜக அரசின் கார்ப்பரேட் பாசம்
நெருக்கடியை எதிர்கொள்ள அரசின் ஒரே தாரக மந்திரமாக இருப்பது என்ன? இந்திய கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் அந்நிய நிதிமுதலாளிகளுக்கும் வரிச்சலுகைகள் வழங்குவதன் மூலம் தான் நிலைமையை சரி செய்ய முடியும் என்பது அரசின் நிலை. அதனால் தான் மந்தநிலை தொடர்பான தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நிய நிதி மூலதனத்தின் மீது ஜூலை பட்ஜெட்டில் போடப்பட்டிருந்த வரியின் மீதான சர்சார்ஜை முழுமையாக ரத்து செய்தார். வேறு சில சலுகைகளையும் அறிவித்தார். இந்திய ஆட்டோ மொபைல்துறை பெருமுதலாளிகளுக்கும் சில சலுகைகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதாக, ரூ.50,000 கோடி அளவிற்கு சலுகைகளை அறிவித்தார். அடுத்து ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகட்டும் துறைகளுக்கு ரூ. 20,000 கோடி கடன் மற்றும் வட்டிசார் சலுகைகளை அமைச்சர் அறிவித்தார். (இதில் அரசின் பங்கு பாதி என்றும் மறுபாதி “மற்றவர்கள்” மூலம் பெறப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.) மந்தநிலை முடிவுக்கு வந்து விட்டதா?
இந்த சலுகைகள் ‘மீட்சியை’ உறுதிப்படுத்தும் என்று அரசு கூறிய போதிலும், பெருமுதலாளிகளின் தொடர்ந்த அழுத்தத்திற்கு அடிபணிந்து தனது அடுத்த நடவடிக்கை யாக பெருமுதலாளிகளுக்கு பெரும் வரிச்சலுகைகளை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி, தற்பொழுது பெரும்பாலான கம்பெனிகளுக்கு 25% ஆகவும் முதலாளி களின் மொத்த லாபத்தில் பெரும்பங்கு கொண்ட மிகப்பெரிய கம்பெனிகளுக்கு 30% ஆகவும் உள்ள லாபவரி இனி அனைத்துக்கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் 22% ஆக இருக்கும். அதுமட்டுமல்ல. இந்த ஆண்டு அக்டோபர் 1 அல்லது அதன்பின் துவக்கப்படும் ஆலைத் துறை கம்பெனி களுக்கு லாபவரி 15% ஆக குறைக்கப்படும். மேற்கூறிய சலுகைகளால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரிவருமான இழப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டவுடன் “சென்செக்ஸ்” என்று அழைக்கப்படும் மும்பை பங்குச்சந்தை குறியீடு கிட்டத்தட்ட இரண்டாயிரம் புள்ளிகள் உயர்ந்தது. அப்படியானால், மந்தநிலை முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள் கொள்ள முடியுமா? இல்லை என்பதுதான் உறுதியான பதில். அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து மறுநாள் பங்கு சந்தையில் ஏற்றம் நிகழ்ந்த போதிலும் அடுத்த சில நாட்களில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து சரிந்தும் வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, மந்தநிலை தொடர்வ தையும் பல்வேறு துறைகளில் கிராக்கி சரிந்துவருவதையும் முதலீடுகள் ஸ்தம்பித்து நிற்பதையும் நாடு கண்டு வருகிறது. இதில் வியப்பு ஏதும் இல்லை. லாபவரியை குறைத்துவிட்டால் பெருமுதலாளிகள் கூடுதல் முதலீடு கள் செய்வார்கள் என்பது பெருமுதலாளி வர்க்கம் அரசிடம் இருந்து கூடுதல் சலுகைகளைப்பெற தொடர்ந்து முன்வைத்து வரும் கதையாடல். நாட்டின் சந்தையிலோ, பன்னாட்டு சந்தைகளிலோ, கிராக்கி அதிகரிக்காமல் தனியார் முதலீடுகள் அதிகரிப்பு என்பது நடக்காது. தற்சமயம், கிராக்கி சரிவால், உள்ள உற்பத்தி கொள்ளளவில் 20 முதல் 40 சதம் பயன்படாமல் உற்பத்தி சுருக்கப்பட்டுள்ள நிலையில், வரிச்சலுகை முதலீடுகளை ஊக்குவிக்காது. எதிர்காலத்தில், அரசை நிர்ப்பந்தித்து பெறப்பட்ட சலுகைகளை கிராக்கி மீண்ட பிறகு பெருமுதலாளிகள் பயன்படுத்திக் கொள் வார்கள். ஆனால் இப்பொழுது முதலீடுகளை செய்ய மாட்டார்கள். அரசே முன்வந்து முதலீடுகளையும் மக்கள் நல செலவுகளையும் மேற்கொண்டால் தான் கிராக்கியை நோக்கி பொருளாதாரம் பயணிக்க முடியும். ஆனால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அடித்துப்பறித்த 1.76 லட்சம் கோடி ரூபாயை வரிச்சலுகைகளிலும் இதர நடவடிக்கைகள் மூலமும் பெருமுதலாளிகளுக்கும் அந்நிய நிதி மூல தனத்திற்கும் அரசு தாரை வார்த்துள்ளது. வேறு வழியே இல்லையா?
என்றாலும் அரசு கிராக்கியை மீட்கவும், வேளாண் துறையில் மகசூலை உயர்த்தவும், வேலையின்மை பிரச்ச னையை எதிர்கொள்ளவும் முதலீடுகளையும் இதர செலவு களையும் கட்டாயம் அதிகரிக்க வேண்டும். ஆனால், அப்படி செலவு செய்தால் அரசின் வரவு செலவு இடைவெளி அதிக மாகிவிடும். இது நிகழ்ந்தால், அந்நிய நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியேறிவிடும் என்ற அச்சத்தில் மத்திய அரசு செலவுசெய்ய மறுக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளின் தாராளமய கொள்கைகளும் மோடி அரசின் முற்றிலும் விப ரீதமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் மக்கள் விரோத ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையும் இன்று இந்திய பொரு ளாதாரத்தை படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, விவசாயத்தையும் ஊரக பொருளாதாரத்தையும் பாதுகாக்கவும், தொழில்துறையில் வளர்ச்சியை சாதிக்க வும், வேலை வாய்ப்பை பெருக்கவும் தேவையான பொதுத் துறை முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை அரசு மூடியும் விற்றும் வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. மந்தநிலையை எதிர்கொள்ளும் நடவடிக்கை என்ற பெயரில் நிலக்கரித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அரசு அனுமதித்திருப்பது “பொழுதெல்லாம் எம் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ” என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்தைச் சாடிய பாரதியின் வரிகளைத்தான் நமக்கு நினைவுக்கு கொண்டுவருகிறது. விவசாயிகள் மீதான தாக்குதல் இன்னும் தீவிரமாகும்
தொழிலாளர் சட்டங்கள் பெருமுதலாளிகளுக்கு சாதக மாக, தொழிலாளிகளுக்கு விரோதமாக மாற்றப்பட்டுள்ளன. இப்பொழுது இந்திய, அந்நிய பெருமுதலாளிகள் கோரி வருவது நிலம் கையகப்படுத்துவது, விவசாயம் ஆகிய துறைகளிலும் தாராளமய கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்படவேண்டும் என்பதுதான். எனவே அடுத்த சுற்றில், விவசாயிகளின் மீதான தாக்குதல் தீவிரமடைய உள்ளது. ஏழை சிறு குறு விவசாயிகளும் நிலமற்ற கூலி தொழிலாளர்களும் கோரிவந்த நில சீர்திருத்தம் கைவிடப் பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ளன. பன்னாட்டு இந்நாட்டு பெரும் கம்பெனிகளுக்கு சாதகமாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட உள்ளது. இவை எதுவும் மந்தநிலையை தீர்க்க உதவாது. மாறாக, மந்தநிலை மேலும் தீவிரமடையும். இதற்கிடையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட இறக்குமதி சரக்குகளின் விலைகளை உயர்த்தி வருகிறது. மறுபுறம் அரசு உணவு, எரிபொருள் மற்றும் உர மானி யங்களை வெட்டி வருகிறது. கிராக்கி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் விவசாயிகளது விளைபொருட்களின் விலைகள் சரிந்து வருகின்றன. கொள்முதல் செய்து கைகொடுக்க அரசு மறுக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு வெண்ணெய், உழைப்பாளி மக்களுக்கு சுண்ணாம்பு என்ற நிலை தொடர்கிறது. பெரும் பொருளாதார சரிவு மக்களை அச்சுறுத்துகிறது. அந்நியச் செலாவணி தங்காது
ரூபாய் மதிப்பு வரும் நாட்களில், மாதங்களில் மேலும் சரியும் என்ற எதிர்பார்ப்புகள் அந்நிய நிதி மூலதனம் இந்தி யாவிற்கு தொடர்ந்து வருவதற்கு ஊக்கம் அளிக்கவில்லை. இவ்வாறு அந்நிய நிதி மூலதனத்தின் உள்வருகை குறைவதும் வெளியேறுவது கூடுவதும் நாட்டின் அந்நியச்செலாவணி பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்த உள்ளது. உலகப்பொருளாதாரத்தில் மந்தநிலை பரவிவரும் சூழலில் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பும் இல்லை.
களம் இறங்குவோம்
மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்றி, அந்நிய நிதி மூலதனத்திற்கும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசின் கொள்கை களை எதிர்த்து அக்டோபர் 10 முதல் 16 வரை வலுவான பிரச்சார இயக்கம் நடத்துமாறு இடது சாரி கட்சிகள் தில்லியில் நடத்திய சிறப்பு கருத்தரங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. அரசின் நாசகர கொள்கைகளை எதிர்த்து கிராமப்புற உழைக்கும் மக்களை திரட்டும் பணியில் நமது இயக்கம் தீவிரமாக களம் இறங்க வேண்டும்.