tamilnadu

img

மக்காவில் ஹஜ் புனித பயணம் தொடங்கியது

மக்காவில் ஹஜ் புனித பயணம் தொடங்கியது. முதல்கட்டமாக 20 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. மக்காவில் உள்ள புனித தலத்திற்குள் முதல் கட்டமாக 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.அவர்கள் அனைவரும் முகக் கவசத்துடன், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் குறைவான பயணிகள் மட்டுமே புனித யாத்திரை மேற்கொள்ள சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு, தனிமைக் காலம் முடிந்த பிறகே ஹஜ் யாத்திரை செல்ல முடியும். சவுதி குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினரை மட்டும் ஹஜ் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.