tamilnadu

விரிவாக்கப்பட்ட பீகார் அமைச்சரவையில் பாஜகவிற்கு இடம் இல்லை

பாட்னா,ஜூன் 2-  விஸ்தரிக்கப்பட்ட பீகார் அமைச்ச ரவையில் பாஜக கட்சியினருக்கு இடம் இல்லை. மத்திய அமைச்சரவையில் ஜக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைச்சர் பதவி வழங்காததால் மோடி மற்றும் பாஜக தலைமை மீது கோபத்தில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பதிலடி நடவடிக்கையாகத்தான் இதனை பார்க்க முடிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார்முதல்வர்  நிதிஷ்குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதா தளமும் அங்கம் வகிக்கிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பாஜக தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக உள்ளார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசில்ஒரு கேபினட் அமைச்சர் பதவி தருவதாக பாஜக கூறியது. ஆனால் இதனை அந்த கட்சி ஏற்கவில்லை. அதோடு ஒதுக்குவதாக கூறப்பட்ட துறையிலும் திருப்தியில்லை. அதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மத்திய அமைச்சர வையில்  பங்கேற்கவில்லை.“நாங்கள் மத்திய அரசில் இணைய வில்லை. இது தான் எங்கள் முடிவு” என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலாளர் வர்மா கூறினார்.முந்தைய மோடி அரசிலும் இந்த கட்சி இணையவில்லை. 2017-ல் தான்தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது என்றாலும், இந்த அரசிலும் பங்கேற்கவில்லை.இந்நிலையில் பீகார் அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பீகார் அமைச்சரவையில் புதியதாக 8 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஐக்கிய ஜனதா தளம்கட்சியை சேர்ந்தவர்கள். பாஜகவினருக்கு பொறுப்பு கொடுக்கப்பட வில்லை. பாஜக, ஒரு அமைச்சரவை பொறுப்பு மட்டும் மத்தியில் கொடுக்க முன்வந்ததை ஐக்கிய ஜனதா தளம் ஏற்கவில்லை. இந்நிலையில் மாநில அமைச்சரவை விஸ்தரிப்பு நடந்துள்ளது. நிதிஷ்குமாரின் நடவடிக்கையால் மாநில பாஜக தலைவர்களும் கட்சியினரும் கோபத்தில் உள்ளனர்.