அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை ஒதுக்காத ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் என இருக்கை ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு முறையாக பின்பற்றப்படுவதில்லை எனவும், இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள் அவதிக்கு ஆளாகி வருவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் அரசு பேருந்துகளில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட வணிக பிரிவு மேலாளர் அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருக்கைகளில் ஆண்கள், வாலிபர்கள் அமர்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அரசு பேருந்துகளில் இருக்கை ஒதுக்கீடு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும், இது குறித்து பயணிகள் புகார்கள் அளிக்கும் பட்சத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.