tamilnadu

img

புஷ்பாஞ்சலி சுவாமி மீது ஆர்எஸ்எஸ் தாக்குதல்

ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் அருகே உண்ணாவிரதம் 


திருவனந்தபுரம், செப்.15- திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் நில அபகரிப்புக்கு எதிராக கோயிலின் மேற்கு வாசல் அருகே உண்ணாவிரதம் மேற்கொண்ட புஷ்பாஞ்சலி சுவாமி பரமானந்த தீர்த்தர் மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.  ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தையும் கட்டடத்தையும் மீட்க வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக புஷ்பாஞ்சலி சுவாமி பரமானந்த தீர்த்தர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். சனியன்று உண்ணாவிரதப்பந்தலை சேதப்படுத்திய குண்டர்கள் பரமானந்த தீர்த்தர் மீது தாக்குதலும் நடத்தினர். 50க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தலையிட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர். கோயில் நிலத்தையும் கட்டடத்தையும் கோயிலுக்கு சொந்தமாக்க வலியுறுத்தி நடக்கும் இப்போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டுள்ளார். திங்களன்று சேவா பாரதி மற்றும் பரமானந்த தீர்த்தரிடம் ஆட்சியர்  விசாரணை நடத்த உள்ளார்.