லக்னோ, மே 19 -உத்தரப்பிரதேசத்தின் சந்தாலி மக்க ளவை தொகுதியில் உள்ள கிராமத்தில் சனிக்கிழமையன்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ. 500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நீங்கள் எங்கள் கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வாக்களிக்க முடியாது என்றும் கூறியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவுக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே வாக்காளர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக கூறப்படும் இந்தகுற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.