திருவனந்தபுரம், ஜுன் 10- கேரளத்தில் செவ்வாயன்று புதிதாக 91 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதியானது. அதில் 80 பேர் (வெளி நாடு- 53, மற்ற மாநிலம்- 27) வெளி யிடங்களில் இருந்து வந்தவர்கள். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த வர்களில் 34 பேர் குணமடைந்தனர். தற்போது 1231 பேர் சிகிச்சையில் உள்ள னர். இதுவரை 848 பேர் குணமடைந்துள்ள னர். கேரளத்திற்கு விமானம் மூலம் 51,135 பேர் வந்துள்ளனர். கப்பல் மூலம் 1621 பேர், சாலை வழியாக 1,26,178 பேர், ரயில் மூலம் 21,708 பேர் என மொத்தம் 2,00,642 பேர் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் 2,04,153 பேர் தனிமை கண்காணிப்பில் உள்ள னர். இவர்களில் 2,02,240 பேர் வீடு கள் அல்லது நிறுவன கண்காணிப்பில் உள்ளனர். 1913 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். செவ்வா யன்று 269 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 3813 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 95,397 மாதிரிகளில் 90,662 இல் நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் சென்டினல் சர்வலைன்ஸின் பகுதியாக சுகாதார ஊழியர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், பொதுமக்களிடம் அதிக தொடர்புடைய சமூக ஊழி யர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினரின் 22,855 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 21,230 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை. மறு ஆய்வு உட்பட மொத்தம் 1,26,088 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. புதிதாக 10 தீவிர பாதிப்பு பகுதிகள் அறிவிக்கப்பட்டன. இதோடு தற்போது கேரளம் முழுவதும் 158 தீவிர பாதிப்பு பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) உள்ளன.