சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.சென்னை நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழை காலத்தில், நடப்பாண்டு சராசரி மழையளவில் 60 சதவிகித அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.