tamilnadu

மெரினா பட துணை நடிகர் தற்கொலை...

சென்னை: 
சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தென்னரசு என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு வயது குழந்தையும் உள்ளது.இந்நிலையில் தென்னரசு அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்ற வீட்டில் உள்ள சீலிங் பேனில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தென்னரசு.இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்கொலை செய்து உயிரிழந்த தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.