கேரள துப்பாக்கிச் சூட்டில் தப்பி ஓடியவர்
பாலக்காடு, நவ.10- கேரள காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்பு அதிரடிப் படைப் பிரிவான ‘தண்டர்போல்ட்’ கமாண்டோக்களுடன் மஞ்சுக் கண்டி வனத்தில் மோதலில் ஈடு பட்டு தப்பிச்சென்ற மவோயிஸ்ட் தீபக் (சந்துரு) கோவை அருகில் உள்ள துடியலூரில் தமிழக காவல் துறையினரிடம் சிக்கினார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சுக்கண்டி வனத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி அம் மாநில காவல்துறையின் தண்டர் போல்ட் பிரிவினர் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் ஏற் பட்ட துப்பாக்கி சண்டையில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொல் லப்பட்டனர். அடுத்தநாள் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆட்சி யர், வட்டாட்சியர்கள், தடயவியல் நிபுணர்கள், காவல்துறையினர் மீது மீண்டும் தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்டுகள் முயன்றனர். அப்போது காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுக்கு மணிவாசன் என்கிற மாவோயிஸ்ட் தலைவர் பலியானார். 7 பேர் கொண்ட கும்ப லில் மற்ற மூவர் காட்டுக்குள் தப்பி ஓடினர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் மாங் கரை காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட மூலக்கங்கன் வனப்பகு தியில் சனியன்று மதியம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள மலைக் கிராம மக்கள் அளித்த தகவலில் சிலர் துப்பாக்கியுடன் அப்பகுதி யில் நடமாடுவது தெரியவந்தது. அதன்படி தீபக் (32) என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மற்ற இருவர் தப்பி விட்டனர். அவர்கள் ஸ்ரீமதி, சோனா என் பது தெரியவந்துள்ளது. அவர் களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீமதி தமிழக காவல்துறையின ரிடம் சிக்கியதாகவும் கூறப்படு கிறது. தீபக்கையும், ஸ்ரீமதியை யும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேரள தண்டர்போல்ட் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ள னர்.
பயிற்சி அளிப்பவர் தீபக்
தமிழக காவல்துறையிடம் சிக்கியுள்ள மாவோயிஸ்ட் தீபக்கை வீரபாண்டி பிரிவில் உள்ள நக்சல் தடுப்பு பிரிவு முகாம் அலுவல கத்துக்கு கொண்டுவந்து விசா ரணை நடத்தினர். அதில் தீபக் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வர் என்பது தெரியவந்துள்ளது. தீபக்கின் கைகால்களில் காயங் கள் உள்ளதாகவும், வேகமாக நடக்க முடியாத நிலையில் சிக்கி கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கேரள தண்டர்போல்ட்டிடம் சிக்கக் கூடாது என்பதற்காக தமிழக எல்லைக்குள் வந்துள்ளனர். இவர் கள் தங்கியிருந்த பகுதியில் உள்ள நீரோடையின் மறுபகுதி கேரள எல்லையாகும். தீபக் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சியை அளிப் பது போன்ற வீடியோ பதிவு ஒன்றை ஏற்கனவே கேரள தண்டர்போல்ட் வெளியிட்டது. ஏ.கே.47, 303 ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவ தற்கான பயிற்சி முகாம்களை அட்டப்பாடி, வயநாடு வனப்பகுதி யில் இவர்கள் அமைத்திருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் உத கையில் தமிழக அதிரடிப் படை யினருக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் தீபக் ஈடுபட்டதாக கூறப் படுகிறது. கடந்த மாதம் ஆன வாய் கிராமத்தில் புகுந்து அரசி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை யடித்த வழக்கும் இவர் மீது உள்ளது. மூத்த மாவோயிஸ்ட் தலைவர் களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பும் தீபக்குக்கு உள்ளதாக தெரிகிறது. மஞ்சுகண்டியில் மோதல் நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினி, செல்போன், பென்டிரைவ் போன்ற வற்றிலிருந்து இதுபோன்ற பல்வேறு தகவல்கள் கேரள காவல்துறையிடம் சிக்கியுள்ளன. தற்போதைய நிகழ்வுகள் கேரள காவல்துறையினர் ஏற்கனவே மாவோயிஸ்ட்டுகள் தொடர்பாக கூறியவற்றை உறுதிப்படுத்தி உள்ளன. மஞ்சிகண்டியில் நடந் தது போலி என்கவுண்டர் என யுடிஎப்பும், பாஜகவும் செய்து வரும் பிரச்சாரங்களுக்கு பதிலடி யாகவும் இவை அமைந்துள்ளன.