திருவனந்தபுரம், நவ. 9- மூன்றாண்டுகளில் கே.எஸ்.எப்.இ நடத்தும் வெளிநாடுகளில் வாழ்வோர் கட்டும் சீட்டு மூலம் பத்தா யிரம் கோடி ரூபாய் கிப்பிக் கான முதலீடாக கிடைக்கும். இந்த கால அளவில் நிறு வனத்தின் விற்று வரவு ஒரு லட்சம் கோடியாக அதி கரித்து அரசுக்கான லாப விகி தம் இரட்டிப்பாகும். அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் நூறு கிளைகள் துவக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு நவம்ப ரில் தொடங்கப்பட்ட வெளி நாடுவாழ்வோர் சீட்டுகளில் மலையாளிகள் சேரும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஓராண்டுக்குள் சுமார் 12 ஆயிரம் பேர் சேர்ந்துள்ள னர். 26 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். 1,22,912 பேர் சேர விருப்பம் தெரிவித்துள்ள னர். வெளிநாடு வாழ்வோர் சீட்டுகளில் சேமிக்கப்படும் தொகை கேரள அரசின் நிதி நிறுவனமான கிப்பியில் வைப்புத் தொகையாக சேமிக்கப்படுகிறது. இது வரை ரூ.63.11 கோடி வைப்புத் தொகையாக கிடைத்துள் ளது. ஒவ்வொரு மாதமும் கிப்பி வைப்புத் தொகை அதி கரிக்கும். சீட்டு எடுப்போ ருக்கு கிப்பி பத்திரங்கள் மூலம் தேவைக்கேற்ப தொகை திரும்ப பெறும் வசதி உள்ளது. அதோடு கேஎஸ்எப்இ யின் சாதாரண சீட்டுகளிலும் அதிக உறுப்பினர்களை சேர்த்து விற்றுவரவை ரூ.42,000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும். சீட்டுகள் மட்டுமல்லாது தவணைக் கடன்கள், தனிநபர் கடன்கள், சீட்டுக் கடன்கள், நகைக் கடன்கள், வாகன கடன்கள் போன்றவற்றுக்கும் விரிவு படுத்தப்படும். திருச்சூரில் கேஎஸ்எப்இ யின் பொன்விழா நினை வாக கட்டப்பட்டுள்ள தலை மையக கட்டடத்தை ஞாயி றன்று (நவ.10) கேரள முதல் வர் பினராயி விஜயன் திறந்து வைக்கிறார். கேஎஸ் எப்இ-யின் செயல்பாடு ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பயன்பட பொன்விழா கொண் டாட்டங்கள் வழிவகுக்கும் என அதன் தலைவர் பிலிப் போஸ் தாமஸ், நிர்வாக இயக்குநர் ஏ.புருஷோத்த மன் ஆகியோர் தெரிவித்த னர்.