tamilnadu

img

ஜெ.கிருஷ்ணமூர்த்திக்கு சிறந்த கல்வியாளர் விருது

புதுச்சேரி,செப்.2- அரசுப் பள்ளி அளவில் சிறந்த பள்ளி ஆசி ரியர், சிறந்த அரசுப் பள்ளி மற்றும் சிறந்த  கல்வியாளருக்கான சிகரம் 2019 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நியூஸ்-18 தமிழ்நாடு தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் புதுச்சேரியில் 2019 ஆம்  ஆண்டுக்கான சிகரம் விருது வழங்கும் விழா வுக்கு தொலைக் காட்சி நிறுவனத்தின் செய்திப் பிரிவின்  நிர்வாக ஆசிரியர் குணசேக ரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்  கத்தின் பொதுச் செயலாளராக  சிறப்பாக பணியாற்றி வருபவரும், புதுச்சேரி அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டதற்காக கல்வியாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்திக்கு 2019 ஆம் ஆண்டுக்கான  சிகரம் விருதை முதல்வர் நாராயணசாமி வழங்கி பாராட்டினார்.  இவ்விழாவில் புதுச்சேரி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விழுப்புரம் தொகுதி மக்களவை  உறுப்பினர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த  விருது வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு  துவக்கப்பட்டது. தமிழகத்தில் மகுடம் விருது  வழங்குவதைப் போல் புதுச்சேரியில்  சிகரம்  விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.