மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற மனிதச்சங்கிலி இயக்கத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான மாணிக் சர்கார் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.