tamilnadu

img

கோட்சே வெறும் கருவிதான்: சூர்யா அடுத்த அதிரடி

சூர்யா அடுத்த அதிரடி

சென்னை, செப்.16- கே.வி.ஆனந்த் இயக்கத் தில் சூர்யா நடிப்பில் உருவாகி யுள்ள காப்பான் பட விழாவில், கோட்சே குறித்து சூர்யா கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் காப்பான். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். மேலும் ஆர்யா, சாயிஷா, பூர்ணா, பொமன் இரானி, சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து காப்பானில் நடித்திருக்கிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற காப்பான் திரைப் பட விழாவில் நடிகர் சூர்யா கோட்சே குறித்து அதிரடிக் கருத்தை வெளியிட்டார்.  “கோட்சே, காந்தியை சுட்ட பின்னர் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது எல்லோ ரும் வன்முறையைப் பற்றி பேசிக்கொண்டி ருக்கும் போது கோட்சேவின் அந்த துப்பாக்கியை எடுத்து சுக்குநூறாக உடைத்து விடுங்கள் என பெரியார் சொன்னார். அப்போது, ‘அய்யா நாங்கள் கோட் சேவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அவருடைய துப்பாக்கியை பற்றி பேசிக்கொண்டிருக் கிறீர்கள்’ என அருகில் உள்ள வர்கள் கேட்டுள்ளார்கள். அதற்கு பதி லளித்த பெரியார், ‘கோட்சே வெறும் துப்பாக்கி தான்’ எனச் சாதாரணமாக சொன்னார்” என்று இந்த விழாவில் சூர்யா பேசினார். மேலும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னும் ஒரு சித்தாந்தம் இருப்பதாக காந்தி கொலை மூலம் தந்தை பெரியார் சுட்டிக் காட்டியிருப்பதாக சூர்யா தெரிவித்தார்.

அண்மைக் காலமாக சூர்யா, நீட் விவகாரம், இந்தி திணிப்பு, சகிப்பு தன்மை, கல்வி அமைப்பு, கருத்து சுதந்திரம் என பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துக் களை வெளிப்படையாகக் தெரிவித்து வரு கின்றார். சில நாட்களுக்கு முன் புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி அவர் பேசியது  பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.